பயணத் திகதி: நவம்பர் 22, 2010
இரண்டாவது நாள் காலை 8 மணிக்கு விடிந்தது. பாணும் மீனும் தேநீரும் காலை உணவாகியது. பலீனாவில் பார்ப்பதற்கு எதுவும் இல்லாததால் அங்கிருத்த கோல்ஸ் அங்காடியில் மேலும் சில பொருட்களை வாங்கிய பின்னர் யாம்பா நோக்கி பயணித்தோம்.
யாம்பா, பலீனாவிலிருது தெற்காக உள்ள ஒரு சிறு துறைமுக நகரம். பசிபிக் நெடுஞ்சாலையில் தெற்காக 80கிமீ பயணித்து, யாம்பா றோட் வழியாக கிழக்காக 15 கிமீ பயணித்தால் யாம்பா நகரை அடையலாம். இங்கிருக்கும் கலங்கரை விளக்கும் கடற்கரையும் பிரபல சுற்றுலா தலங்கள் என்று ஒரு வழிகாட்டி கையேடு சொன்னதால் இங்கு செல்ல முடிவெடுத்திருந்தோம். நாம் யாம்பாவை சென்றடையும் போது காலை 11மணி ஆகியிருந்தது. புகைப்படங்கள் எடுக்கவும் இளைப்பாறவும் சிறிது நேரம் அங்கு நிறுத்திய பின்னர் கிறாப்டன் நோக்கிய எமது பயணம் தொடர்ந்தது.





அடுத்த பதிவில் கிறாப்டன்…
payanam asaththal. pukaippadangkal arumai. vaalththukkal