பயணத் திகதி: நவம்பர் 21, 2010
எமது பயணத்தின் முதல் நாளில் நாம் சென்ற முக்கியமான ஊர் நிம்பின். இது நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில், பிரபலமான பைரன் குடாவிலிருந்து 70 கிமீ மேற்காக அமைந்துள்ளது. நிம்பின் தொழிற்துறை ரீதியாக பின்தங்கிய ஒரு பிரதேசத்தில் இருந்தாலும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்த ஒரு கிராமமாக திகழ்கிறது. இது அவுஸ்திரேலிய Bundjalung பழங்குடி மக்களின் பூர்வீக இடமா கருதப்பட்டாலும், தற்காலத்தில் மாற்று கலாச்சாரங்களுக்கான ஒரு மையமாக உருவெடுத்துள்ளது.
நிம்பின் அவுஸ்திரேலியாவின் ‘கஞ்சா தலைநகரமாக’ கருதப்படுகிறது. இங்கு கஞ்சாவின் ‘நேரடி’ விற்பனை இல்லாவிட்டாலும், கஞ்சா கலாச்சாரம்/ஹிப்பி கலாச்சாரம் சார்ந்த ஏனைய பொருட்கள் இலகுவில் கிடைப்பது பலர் இந்த ஊரை நாடிவர முக்கிய காரணம் என குறிப்பிடப்படுகிறது. இங்கு வருடாந்தம் நடைபெறும் கஞ்சா மாநாட்டிற்கு அவுஸ்திரேலியாவிலிருந்து மட்டுமல்லாது பல வெளிநாடுகளிலிருந்தும் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொள்வது இந்த ஊரின் பெருமையைச் சொல்கிறது.







முதலாவது நாள் கிறாப்டன் நகருக்கு பயணிப்பதாக திட்டமிட்டிருந்தாலும், நிம்பின் நோக்கிய எமது பாதை விலகலால், இரவாகும் போது பைரன் குடாவிற்கு தெற்காக உள்ள பலீனா நகரில் தங்க முடிவெடுத்தோம். முதல் நாளில் 297கிமீ பயணம் செய்திருந்தோம். நாம் எடுத்துச் சென்றிருந்த பாணும் டூனாவும் எமது இரவு உணவாகியது.
அடுத்த பதிவில் யாம்பா…
நிம்மின் புகைப்படங்கள் அருமை. பகிர்வுக்கு நன்றி . வாழ்த்துக்கள்.
நன்றி சரவணன்.
படங்கள் நன்று, அதுவும் கடைதிறப்பு நேரப்பட்டியலிலேயே விளங்குகிறது நிலைமை 😉
நன்றி வசந்தன்.