Jul 22, 2009 4
பக்திவேல் பதிவுலகிலிருந்து விலகல் – திரட்டிஸ்பொட் திட்டம் கைவிடப்பட்டது

பிரபல புதிய பதிவர் பக்திவேல் பிரபல மூத்த பதிவர்களால் கட்டம் கட்டப்பட்டு பதிவுலகை விட்டு வெளியேறவைக்கப்பட்டதை கண்டித்து புதிதாக ஆரப்பிக்கப்பட இருந்த திரட்டி வழங்கி திட்டமான “திரட்டிஸ்பொட்” திட்டம் காலவரையறையின்றி கைவிடப்பட்டுள்ளது என்பதனை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
புதிய பதிவரும், வலையுலக புரட்சியாளரும், துப்புதுலக்கி எழுத்தாளருமாகிய (investigative journalist) மதிப்புக்குரிய பக்திவேல் “பிடிக்காத புத்தகங்கள்” என்ற பலராலும் படிக்கப்படும் ஒரு பதிவை எழுதி வந்தது, வலையுலகம் முழுதும் அறிந்த்தே. அண்ணலின் அதீத வளர்ச்சி பொறுக்கா கயவர்கள் தமது எழுத்தால் அண்ணலை எதிர்கொள்ள தீரமற்று பின்னூட்ட கயமைத்தனத்தை பயன்படுத்தி அண்மைக்காலமாக தாக்குதல் நடத்திவந்தனர். மூத்த பதிவர்கள் என்ற முகமூடிக்குள் மறைந்து இந்த நயவஞ்சக நாடகத்தை நடத்திய கபோதிகளின் நடவடிக்கை பொறுக்காமல் அண்ணல் பக்திவேல் பதிவுலகைவிட்டு தான் விலகுவதாக இன்று அறிவித்துள்ளார்.
அண்ணல் பக்திவேலின் விலகலானது, பதிவுலகிற்கு மட்டுமன்றி தமிழ் கூறும் நல்லுலகிற்குமே பேரிழப்பாகும். இத்த செய்திகேட்டு எம் கண்கள் பனித்தன, வயிறு புளித்தது, இதயம் இடித்தது. திரட்டிகளின் வளர்ச்சிக்கு பெரும் உந்துகோலாக இருந்த பக்திவேல் இல்லாத ஒரு வலையுயக சூழலில் “திரட்டிஸ்பொட்” போன்ற திரட்டி வழங்கி பயனற்றது என நாம் கருதுவதால் இந்த திட்டம் காலவரையறையின்றி கைவிடப்பட்டுள்ளது.
நன்றி.
திரட்டிஸ்பொட் – (எதிர்கால) நிர்வாகம்
Recent Comments