Tag Archives: Photography

இந்த சாமி, சாமியா? ஆசாமியா??

நாம் சாமிகள் என்று நினைக்கும் பல(ர்) உண்மையில் சாமிகளாகவன்றி ஆசாமிகளாகவே இருப்பதை அறிந்திருக்கிறேன். இந்த பதிவில் இருப்பதும் அவ்வாறான ஒரு ஆசாமியா என சிலர் எண்ணக்கூடும். ஆகவே படங்களில் உள்ள முகங்களை கவனமாக(?!) பார்க்கவும், அல்லது கடைசிவரை வாசிக்கவும்.

நேற்று ‘தனிமை’ போட்டிக்காக பதிவு போட்டபோது முதலில் இந்த படத்தை போடலாம் என்றிருந்தேன். பிறகு வேறு படத்தை போட்டிருந்தாலும் இதையும் இங்கு பகிர்கிறேன்.

இந்த படம் தஞ்சாவூர் சரபோஜி மஹாலில் எடுக்கப்பட்டது.

சாமி - ஆசாமி
மேலே உள்ளது லெமோகிராபி (Lemography) முறையில் பிற்சேர்க்கை செய்ய முயற்சித்தது. Photoshopல் எவ்வாறு செய்யலாம் என்று இங்கே உள்ளது. GIMPஇலும் அதே முறையில் செய்யலாம்.

கீழே உள்ளது Picasaவில் பிற்சேர்க்கை செய்த அதே படம்.
சாமி - ஆசாமி

இதுதான் மூலப்படம்.
Lemography ஆசாமி

இறுதியாக, இந்த படத்தில் இருக்கும் ஆசாமி… அது நான் தான்!!
அப்ப முதல் பந்தி…? சும்மா…!! ;)

கேடயக் குறிப்பு:

  1. பொய் சொல்வதை தவிர எனக்கும் அவருக்கும் பொதுவான ‘திறமைகள்‘ எதுவும் இல்லை.
  2. நீண்ட கேசத்தை தவிர வேறு ஒற்றுமைகளும் இல்லை. (இப்ப அதுவும் இல்லை)
  3. ஆகவே, ‘நான் அவன்(ர்?) இல்லை…!’
  4. இது ‘கேடயக் குறிப்பு‘ இல்லை… :)

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

தனிமையில் ஒரு பொன்மாலைப் பொழுது

PIT – ஏப்ரல் – 2008 போட்டிக்காக ஏதாவது ஒரு படம் எடுக்கலாம் என்று கமராவை தேடின போதுதான் அதை நண்பனொருவனுக்கு கொடுத்தது ஞாபத்துக்கு வந்தது. சரியெண்டு அவனுக்கு கோல்பண்ணினா அவன் கமராவோட திருச்சிக்கு போயிட்டான்.

சரி, ‘வெல்லுறது முக்கியமில்ல, படம்காட்டுறது தான் முக்கியம்!’ என்றதுக்காக ஏற்கனவே எடுத்த படங்களுக்க தேடேக்க இதுதான் மாட்டிச்சு. எவ்வளவு பொருத்தம், எப்பிடி இருக்கெண்டு நீங்கதான் சொல்லோணும்….

தனிமையில் ஒரு பொன்மாலைப் பொழுது
படத்தில இருக்கிறவர் பிறைதீசன். அவற்ற தனிமைய பற்றி தனிப்பதிவில பாக்கலாம். :)

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

பங்குனி மாத பிரதிபலிப்புக்கள்

வணக்கம்,

நான் தமிழில் எழுதுவதற்காக இந்த வலைப்பதிவு ஆரம்பித்தாலும் முதலாவது பதிவுக்கு பிறகு எதை எழுதுவது என்று ஒரே குழப்பம். (அதிகம் தெரிந்தோர்க்கும், ஒன்றும் அறியாதோர்க்கும் இந்த நிலை சகஜம் தானே…!)

ஆக இந்தக் குழப்பத்தில் இருந்த நேரம் தான் PIT போட்டியில் படம் காட்டலாம் என்கிற ஒரு எண்ணம். இந்த மாதம் பிரதிபலிப்புக்கள் என்ற தலைப்பில் படம் காட்ட வேண்டும் என்பதற்காக எடுத்த இரு படங்கள் தான் இவை.

பிரதிபலிப்பு - Reflection
வாதுவ கடற்கரை, இலங்கை. மாலை 6 மணி.

பிரதிபலிப்பு - Reflection
வீட்டு குளியலறை. இரவு 10 மணி

படம் காட்டியாச்சு. பின்னூட்டம் போடுபவர்கள் போடலாம். பதிலுக்கு உங்கள் பதிவிலும் ஒரு பின்னூட்டம் போடப்படும் :) . அடுத்த பதிவில் சந்திக்கலாம்.

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்